என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
பர்கூரில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த 2 வாலிபர்கள் கைது
பர்கூரில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள பாகிமானூர் பகுதியை சேர்ந்தவர் மேகலா (வயது 38). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர் தனது தோழியான டாக்டர் கோகிலா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து வைத்துள்ளார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, கோகிலா தனது கணவரின் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து மேகலா பர்கூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து கொடுப்பதாக கூறி ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்து கொண்டு சென்றனர். இதுகுறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிதா வங்கி ஏ.டி.எம் -ல் உள்ள கண்காணிப்பு கேமராவையும், பர்கூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மத்திகிரி அடுத்த கொத்தகொண்டபள்ளி பகுதியை சேர்ந்த மணி (27), மஞ்சுநாத் (33) ஆகியோர் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டு மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






