search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமிகள்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமிகள்.

    திருப்பூர் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்

    உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது.
    அவினாசி:

    புத்தாண்டு தினமான இன்று திருப்பூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது என்ற வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை அம்மன் உடனுறை அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. 

    கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் அவினாசி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான், கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு சுபிட்சமாக வாழவேண்டி இன்று கருணாம்பிகை அம்மன், அவினாசிலிங்கேசுவரர் சுவாமிகளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதையடுத்து சுவாமிக்கு தங்க காப்பு அணிவிக்கப்பட்டு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அவினாசி, ஊட்டி,தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், சேவூர், புதுப்பாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் கங்காதீசுவரர், மாரியம்மன் கோவில், அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது. 

    நவநீதகிருஷ்ணன் ஸ்ரீ பூமா நீளாச்சமேத சீனிவாச பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள், பால், பன்னீர், தேன், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், நலுங்கு பொடி, நெய் அபிஷேகங்கள் நடைபெற்றது. 

    புத்தாண்டை முன்னிட்டு இன்று நடந்த பூஜையில் பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தார்கள். உடுமலை குட்டை திடலில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மூலவர் தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசன்ன விநாயகர் கோவிலில் அதிகாலை பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விபூதி அலங்காரத்தில் பிரசன்ன விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சவுரிராஜ பெருமாள் சன்னதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சவுரிராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதே போல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளி காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், சுக்ரீஸ்வரர் ஆலயம், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர், முருகன், அம்மன் ஆலயங்களிலும் , ஊத்துக்குளி தென் திருப்பதி கோவில் மற்றும் சாய்பாபா கோவில் ஆகியவற்றில் மக்கள் காலை முதலே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×