என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் முதியவர் பிணம்
Byமாலை மலர்31 Dec 2021 10:13 AM GMT (Updated: 31 Dec 2021 10:13 AM GMT)
திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே ஆவியூர் தென்பெண்ணை ஆற்றில் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றியதோடு, இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் ராஜன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(வயது 82) என்பதும், கடந்த 23-ந் தேதி திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள தனது மகளை பார்க்க வந்தவர், தென்பெண்ணையாற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X