என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உடையார்பாளையம் அருகே முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    உடையார்பாளையம் அருகே முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாவித்திரி(வயது 55). இவர்களது மகன் கார்த்திகேயன்(27). இவர் திருமணம் செய்து வைக்கக்கோரி தினமும் சாவித்திரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் கார்த்திகேயன் கைலியால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வந்து பார்வையிட்டு, கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சாவித்திரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×