என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவர் கைது
பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனை கிராமம், அஞ்சுகம் காலணி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் துரைசாமி (61). இவர் நேற்று காலை 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, முதியவர் துரைசாமியை கைது செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் துரைசாமியை பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, முதியவர் துரைசாமியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் அருகே எசனை கிராமம், அஞ்சுகம் காலணி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் துரைசாமி (61). இவர் நேற்று காலை 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, முதியவர் துரைசாமியை கைது செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் துரைசாமியை பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, முதியவர் துரைசாமியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Next Story






