என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வைரம் பறிமுதல்
ஆலந்தூர்:
ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதோடு டி.ஆர்.ஐ. மற்றும் சுங்கத்துறையினா இணைந்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சோதனை செய்தனர், மும்பையை சேர்ந்த 35 வயது ஆண் பயணிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாக தகவல் அளித்தார்.
அவர் ஆப்பிரிக்கா நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்தது தெரியவந்தது.
அந்த பயணியை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவர்களை எடுத்து பிரித்து பார்த்தனர்.
அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.88 லட்சம் ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.






