என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் கருத்து பட்டறை நடைபெற்ற காட்சி.
பாதுகாப்பான முறையில் தூய்மைப்பணி-பணியாளர்களுக்கு விளக்கம்
எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
தூய்மைபணியாளர்கள் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது சில நேரங்களில் விபத்துக்கள் நிகழ்ந்து விடுகிறது.மேலும் எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தூய்மை பணியாளர்கள் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த கருத்து பட்டறை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கமிஷனர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் தூய்மைப்பணி மேற்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story