என் மலர்
உள்ளூர் செய்திகள்

அபராதம்
சங்கராபுரத்தில் பொது இடத்தில் புகை பிடித்த 6 பேருக்கு அபராதம்
சங்கராபுரத்தில் பொது இடத்தில் புகைபிடித்த 6 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொது இடத்தில் புகைபிடித்த 6 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மேற்பார்வையாளர் பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






