search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக பெத்தனப்பள்ளி அருகே உள்ள கெட்டூரை சேர்ந்த முருகேசன் (வயது 32), பூந்தோட்டம் கிருஷ்ணமூர்த்தி (59), செம்படமுத்தூர் பெருமாள் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,490 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சூளகிரி போலீசார் உத்தனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோதுகானப்பள்ளியை சேர்ந்த அருண்குமார் (வயது 30), சதீஷ் (26), சரண் (23), பீரேப்பள்ளி குமரேசன் (25), முரளி (30), மாதேஷ் (32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,140 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×