search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    கம்பைநல்லூர் போலீசார் கெலவள்ளி, கூடுத்துறைப்பட்டி, இருமத்தூர் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது கடைகளில் புகையிலை விற்ற மாரியப்பன் (வயது 53), சரோஜா (55), ரகுபதி(43) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×