என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து பலி
குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலி
குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆக்கனூர் பாளையத்தை சேர்ந்தவர் செல்லையா. மகன் பன்னீர் செல்வம் (வயது 34). சம்பவத்தன்று இவர், தனது நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனம் நன்னை கிராமத்தில் வரும் போது எதிரே ஆனந்தராஜ் (30) என்பவர் ஓட்டிவந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வம் மற்றும் மணிகண்டனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இவர்களில் பன்னீர் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






