search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கந்திகுப்பம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

    கந்திகுப்பம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் காளி கோவில் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 39) என்பவர் பைப்லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×