என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புளியங்குடியில் தபால் ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை
Byமாலை மலர்25 Dec 2021 9:19 AM GMT (Updated: 25 Dec 2021 9:19 AM GMT)
புளியங்குடியில் தபால் ஊழியர் வீட்டில் மேஜை மீது வைத்திருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27), இவர் அரியநாயகிபுரம் தபால் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார்.
இவர் அதே பகுதியில் வீடு ஒன்று புதிதாக கட்டி வருகிறார். இதற்காக சம்பவத்தன்று ரூ.1.80 லட்சம் வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளார். இரவு வீட்டில் உள்ள மேஜையில் பணத்தை வைத்துவிட்டு சுப்பிரமணியன் தூங்க சென்றார்.
காற்று வர வேண்டும் என்பதற்காக முன்பக்க வாசலை திறந்து வைத்திருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மேஜையில் இருந்த பணத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோ மற்றும் வீட்டில் இருந்த மற்ற இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த சுப்பிரமணியன் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27), இவர் அரியநாயகிபுரம் தபால் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார்.
இவர் அதே பகுதியில் வீடு ஒன்று புதிதாக கட்டி வருகிறார். இதற்காக சம்பவத்தன்று ரூ.1.80 லட்சம் வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளார். இரவு வீட்டில் உள்ள மேஜையில் பணத்தை வைத்துவிட்டு சுப்பிரமணியன் தூங்க சென்றார்.
காற்று வர வேண்டும் என்பதற்காக முன்பக்க வாசலை திறந்து வைத்திருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மேஜையில் இருந்த பணத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோ மற்றும் வீட்டில் இருந்த மற்ற இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த சுப்பிரமணியன் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X