என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வாகித் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 52). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 6 கிராம் தங்க மோதிரங்கள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து முகமது யூசுப் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story