search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விவசாயி பலி

    காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே உள்ள ஏரியின் கீழூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 47). விவசாயி. இவர் பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலைதடுமாறி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×