search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    போக்குவரத்து அதிகாரி வீட்டில் நகை-பணம் திருட்டு

    மதுரையில் போக்குவரத்து அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜதுரை விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரை:

    மதுரை தனக்கன்குளம் முல்லை நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 69). இவர் அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் முன்புற கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பினர்.

    இதுகுறித்து ராமச்சந்திரன், திருநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×