என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    திருக்கோவிலூர் தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்- பா.ஜ.க. கோரிக்கை

    மழையால் சேதம் அடைந்த திருக்கோவிலூர் தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் கார்த்திகேயன் தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருக்கோவிலூர் கீழையூர்-அரகண்டநல்லூரை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் பல்வேறு நிலைகளில் சேதமடைவதும், அதை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் சீர்செய்வதுமாக இருந்து வருகிறது. இந்த தரைப்பாலத்தில் பாதசாரிகள், வாகன ஒட்டிகள் குறிப்பாக அரகண்டநல்லூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை வாகனங்கள் மூலம் இந்தவழியாகத்தான் கொண்டு செல்கிறார்கள்.

    கடந்த மாதம் பெய்த மழை மற்றும் அதனால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பாலத்தின் பெரும்பகுதி சேதம் அடைந்துள்ளதால் இந்த வழியாக செல்ல பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து நிகழ்வதற்கு முன்னதாக தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து பாலத்தை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×