என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொளத்தூர் அருகே தின்னர் குடித்து 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 Dec 2021 9:31 AM GMT (Updated: 22 Dec 2021 9:31 AM GMT)
கொளத்தூர் அருகே தின்னர் குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சாமியார் கரடு பகுதியில் இன்று காலை 2 பேர் இறந்து கிடந்தனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இறந்த 2 பேரும் சாமியார் கரடு அருகே வசித்து வந்த மாதப்பன் (வயது 55) என்பதும், மற்றொருவர் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையை சேர்ந்த அவரது உறவினர் பேரன் (60) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள் ஆவர். அவர்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகில் சுவர்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் தின்னர் டப்பா கிடந்தது.
அதிக போதைக்காக தின்னர் குடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சாமியார் கரடு பகுதியில் இன்று காலை 2 பேர் இறந்து கிடந்தனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இறந்த 2 பேரும் சாமியார் கரடு அருகே வசித்து வந்த மாதப்பன் (வயது 55) என்பதும், மற்றொருவர் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையை சேர்ந்த அவரது உறவினர் பேரன் (60) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள் ஆவர். அவர்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகில் சுவர்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் தின்னர் டப்பா கிடந்தது.
அதிக போதைக்காக தின்னர் குடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X