search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    கொளத்தூர் அருகே தின்னர் குடித்து 2 பேர் உயிரிழப்பு

    கொளத்தூர் அருகே தின்னர் குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சாமியார் கரடு பகுதியில் இன்று காலை 2 பேர் இறந்து கிடந்தனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இறந்த 2 பேரும் சாமியார் கரடு அருகே வசித்து வந்த மாதப்பன் (வயது 55) என்பதும், மற்றொருவர் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையை சேர்ந்த அவரது உறவினர் பேரன் (60) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள் ஆவர். அவர்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகில் சுவர்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் தின்னர் டப்பா கிடந்தது.

    அதிக போதைக்காக தின்னர் குடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×