search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளக்கு பூஜை நடைபெற்ற காட்சி.
    X
    விளக்கு பூஜை நடைபெற்ற காட்சி.

    மகாலட்சுமி கோவிலில் திருவிளக்கு பூஜை

    சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அமாவாசை நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்க வேண்டி கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

    இதை மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதையொட்டி மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×