என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
அரிமளம் அருகே தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி
அரிமளம் அருகே தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அறந்தாங்கி அருகே உள்ள கடையாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா (வயது 40). எலக்ட்ரீசியன். இவர், சம்பவத்தன்று அரிமளம் அருகே உள்ள பொந்துப்புளி கிராமத்தில் ஒருவரது புது வீட்டில் வயரிங் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து கீழே இறங்க ஏணி வைத்திருந்தார். அதில் கால் வைத்தபோது வீரையா தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






