search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கிருஷ்ணகிரி அருகே கார் மோதி லாரி உரிமையாளர் பலி

    கிருஷ்ணகிரி அருகே கார் மோதி லாரி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே தட்ரஹள்ளியை சேர்ந்தவர் குமார் (வயது 46). லாரி உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் சுங்கச்சாவடி அருகில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த சொகுசு கார் குமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×