search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி.
    X
    தக்காளி.

    வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி ரூ.50- க்கு விற்பனை

    சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ. 70-க்கு மளிகை கடைகளில் விற்பனையானது.
    திருப்பூர்:

    கடந்த ஒரு மாதமாக தக்காளி விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. 

    குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரும் போதும் உள்ளூர் வரத்து குறையும் போதும் தக்காளி விலை மாறுபட்டது. கிலோ ரூ.1 20 வரை தக்காளி விலை சென்றது. வரத்து சற்று அதிகரித்ததுடன் முகூர்த்த, விசேஷ தினங்கள் நிறைவுக்கு பின் விற்பனை சற்று குறைந்ததால் தக்காளி விலையும் குறைய துவங்கியது. 

    கடந்த வாரம் கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்ற தக்காளி தற்போது மேலும் விலை குறைந்து கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. 

    திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு தட்டுப்பாடு காரணமாக இரண்டு டன் தக்காளி வந்த நிலையில் தற்போது 4.10 டன் தக்காளி வரத்தாக  உள்ளது. இதனால் கிலோ தக்காளி ரூ. 50-க்கு விற்கப்பட்டது. 

    மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக இருந்த போதும், சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ. 70-க்கு மளிகை கடைகளில் விற்பனையாகிறது.
    Next Story
    ×