என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓசூர் அருகே சூதாடிய 7 பேர் கைது

    ஓசூர் அருகே சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் டவுன் போலீசார் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தேர்ப்பேட்டை சந்திரன் (வயது 33), முனிகுட்டியப்பா நகர் முரளி (24), நரசிம்மா காலனியை சேர்ந்த ஷாகித் (30), வசந்த்நகர் வேலன் (33), ஜனப்பர் தெரு கோபிநாத் (28), அப்பாவு நகர் ராஜ்குமார் (31), ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பாபு (35) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×