என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த கொமந்தான்மேடு தரைப்பாலம்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த கொமந்தான்மேடு தரைப்பாலம்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொமந்தான்மேடு தரைப்பாலம் உருக்குலைந்து போனது. இதனால் 20 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பாகூர்:
பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 10ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி கடலூர் மாவட்ட பராமரிப்பிலும், மற்றொரு கரை புதுச்சேரி அரசு பராமரிப்பிலும் உள்ளது.
இந்த தரைப்பாலம் கடந்த காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்கனவே சேதம் அடைந்திருந்தது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து பாலத்தின் சேதத்தை சரிசெய்தனர். ஆனால் தரமற்ற நிலையில் பாலம் கட்டப்பட்டதால் இதுவரை 3 முறை சேதமடைந்துள்ளது. ஆற்றில் அதிகபடியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே தடுப்பணை உடைந்து விடுவது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் கொமந்தான்மேடு தரைப்பாலம் சேதமடைந்தது. தற்போது வெள்ளம் குறைந்துள்ள நிலையில், தடுப்பணை உருக்குலைந்து காட்சியளிக்கிறது.
கடலூர் மாவட்டம் பகுதியில் கரை சேதமான நிலையில் அங்குள்ள அதிகாரிகள் கரையை பலப்படுத்த முயன்று ஓரளவுக்கு கரையை பாதுகாத்தனர். ஆனால் புதுச்சேரி பகுதியில் உள்ள கரையை பலப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் கரை சுமார் 100 மீட்டர் அளவுக்கு உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்து வருகிறது.
பாலத்தின் தற்போதைய நிலையில் இனி தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக கடலூர் - புதுச்சேரி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி, சோரியாங்குப்பம் அல்லது கன்னியக்கோவில் வழியாகத்தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் தடுப்பணை சேதமடைந்தது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 10ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி கடலூர் மாவட்ட பராமரிப்பிலும், மற்றொரு கரை புதுச்சேரி அரசு பராமரிப்பிலும் உள்ளது.
இந்த தரைப்பாலம் கடந்த காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்கனவே சேதம் அடைந்திருந்தது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து பாலத்தின் சேதத்தை சரிசெய்தனர். ஆனால் தரமற்ற நிலையில் பாலம் கட்டப்பட்டதால் இதுவரை 3 முறை சேதமடைந்துள்ளது. ஆற்றில் அதிகபடியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே தடுப்பணை உடைந்து விடுவது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் கொமந்தான்மேடு தரைப்பாலம் சேதமடைந்தது. தற்போது வெள்ளம் குறைந்துள்ள நிலையில், தடுப்பணை உருக்குலைந்து காட்சியளிக்கிறது.
கடலூர் மாவட்டம் பகுதியில் கரை சேதமான நிலையில் அங்குள்ள அதிகாரிகள் கரையை பலப்படுத்த முயன்று ஓரளவுக்கு கரையை பாதுகாத்தனர். ஆனால் புதுச்சேரி பகுதியில் உள்ள கரையை பலப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் கரை சுமார் 100 மீட்டர் அளவுக்கு உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்து வருகிறது.
பாலத்தின் தற்போதைய நிலையில் இனி தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக கடலூர் - புதுச்சேரி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி, சோரியாங்குப்பம் அல்லது கன்னியக்கோவில் வழியாகத்தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் தடுப்பணை சேதமடைந்தது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






