என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கெலமங்கலம் அருகே மரத்தில் லாரி மோதி கிளீனர் பலி

    கெலமங்கலம் அருகே மரத்தில் லாரி மோதி கிளீனர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள நெருப்புகுட்டையை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 17). லாரி கிளீனர். நேற்று முன்தினம் இவர் லாரியில் கெலமங்கலம் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சளகிரி பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். லாரியை டிரைவர் சரத்குமார் (21) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மஞ்சளகிரி பஸ் நிறுத்தம் அருகில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனிராஜ் இறந்தார். டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×