என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 46). இவர் தற்போது மூரார்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து மூட்டை தூக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டு திண்ணையில் மயங்கி கிடந்த விஜய்யை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி தாங்க முடியாமல் விஜய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×