என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

    கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர்:

    ராஜபாளையம் அருகே உள்ள சம்பந்தப்புரத்தைச் சேர்ந்தவர் நபிஸா பிவி. இவரது பேத்தி சையது அலி பாத்திமா (19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    நபிஷா பிவி தனது பேத்தியை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சையத் அலி பாத்திமா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சிவகாசி அருகே உள்ள எம். புதுப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் கடந்த 9ந் தேதி திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இது குறித்து அவரது மனைவி அழகு லட்சுமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.


    Next Story
    ×