search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பள்ளி சுவர் இடிந்து பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

    சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    நெல்லை பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதுடன், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி

    Next Story
    ×