என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எலக்ட்ரானிக் கழிவுப்பொருட்களை ஒப்படைக்க பொதுமக்களுக்கு அழைப்பு
Byமாலை மலர்17 Dec 2021 7:47 AM GMT (Updated: 17 Dec 2021 8:21 AM GMT)
விருப்பம் இருந்தால் அதற்கான தொகையும் பெற்று கொள்ளலாம் என ‘துப்புரவாளன்’ அமைப்பினர் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பகுதியினர் தங்களிடமுள்ள எலக்ட்ரானிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்பினால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து ‘துப்புரவாளன்’ என்ற தன்னார்வ அமைப்பு பொதுமக்களிடமிருந்து வீடுகளில் பயன்படுத்தாமலும், அப்புறப்படுத்த வழியில்லாமலும் தேங்கிக் கிடக்கும் எலக்ட்ரானிக் கழிவுகளை பெற்று அவற்றை முறையாக அழிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஒரு வாய்ப்பு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வருகிற 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் எலக்ட்ரானிக் கழிவுகளை பெற்று கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ‘டி.வி.’, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், சார்ஜர், லேப்டாப், கம்ப்யூட்டர், ஹெட்போன் போன்ற பயன்படுத்தாமல் உள்ள பொருட்களை பொதுமக்கள் கொண்டு வந்து ஒப்படைக்கலாம்.
விருப்பம் இருந்தால் அதற்கான தொகையும் பெற்று கொள்ளலாம் என ‘துப்புரவாளன்’ அமைப்பினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X