என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகங்கை மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

    பொதுமக்கள் வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக நாளை (17-ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் அரண்மனை சிறுவயல் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் வெள்ளிக் கட்டி கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் பையூர் கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் கரிசல் பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் கீழப்பூங்குடி கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மேலநெட்டூர் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் பிரமனூர் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் அரணையூர் கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் உடையாரேந்தல் கிராமத்திலும் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×