என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாநில கேரம் போட்டியில் பங்கேற்க திருப்பூரில் 15 பேர் தேர்வு
Byமாலை மலர்15 Dec 2021 7:50 AM GMT (Updated: 15 Dec 2021 7:50 AM GMT)
வயது வரம்பற்றோர் பிரிவில் நவீன்குமார், கணேசன், தங்கராஜ், கணேசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது. ஜூனியர், சீனியர், வயது வரம்பற்றவர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. 141 பேர் பங்கேற்றனர்.
‘நாக்-அவுட்’ முறையில் போட்டி நடத்தப்பட்டு இரவு அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி நடந்தது. மாணவர் பிரிவில் மகேந்திரன், ரோஷன்ஜோஸ்வா, ஹிரிதர்ஷன், பழனிசாமி. மாணவிகள் பிரிவில் மேனகா, சிவரஞ்சனி, லாவண்யா, ரிஷிகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் 8 பேரும் இம்மாதம் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 3 நாட்கள் சிவகாசியில் நடக்கும் மாநில கேரம் போட்டியில் பங்கேற்க உள்ளனர். வயது வரம்பற்றோர் பிரிவில் நவீன்குமார், கணேசன், தங்கராஜ், கணேசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் வரும் 18 மற்றும் 19-ந் தேதி அரியலூரில் நடக்கவுள்ள மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X