search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாநில கேரம் போட்டியில் பங்கேற்க திருப்பூரில் 15 பேர் தேர்வு

    வயது வரம்பற்றோர் பிரிவில் நவீன்குமார், கணேசன், தங்கராஜ், கணேசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.
     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது. ஜூனியர், சீனியர், வயது வரம்பற்றவர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. 141 பேர் பங்கேற்றனர்.

    ‘நாக்-அவுட்’ முறையில் போட்டி நடத்தப்பட்டு இரவு அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி நடந்தது. மாணவர் பிரிவில் மகேந்திரன், ரோஷன்ஜோஸ்வா, ஹிரிதர்ஷன், பழனிசாமி. மாணவிகள் பிரிவில் மேனகா, சிவரஞ்சனி, லாவண்யா, ரிஷிகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இவர்கள் 8 பேரும் இம்மாதம் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 3 நாட்கள் சிவகாசியில் நடக்கும் மாநில கேரம் போட்டியில் பங்கேற்க உள்ளனர். வயது வரம்பற்றோர் பிரிவில் நவீன்குமார், கணேசன், தங்கராஜ், கணேசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர். 

    இவர்கள் வரும் 18 மற்றும் 19-ந் தேதி அரியலூரில் நடக்கவுள்ள மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
    Next Story
    ×