search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    சென்டாக் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.15¼ கோடி ஒதுக்கீடு- கவர்னர் ஒப்புதல்

    சென்டாக் மாணவர்களுக்கு ரூ.15 கோடியே 34 லட்சம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பல்வேறு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையின் பயன்பாட்டிற்கு கணினி மயமாக்கப்பட்ட ரேடியோகிராபி எந்திரம் ஒன்று வாங்குவதற்கு ரூ.9 லட்சத்து 52 ஆயிரம் அளித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பாசிக் நிறுவனத்தின் செயல்பாட்டை மீட்டெடுக்கவும், லாபகரமாக இயக்கவும், மூலதன முதலீட்டின் இரண்டாவது தவணையாக ரூ.2 கோடி நிதிக்கொடை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், தொழில்நுட்பம், செவிலியர் பாடப் பிரிவுகளின் பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியுதவி தொகையை வழங்குவதற்காக ரூ.15 கோடியே 34 லட்சம் நிதிச் செலவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×