என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம்
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கொள்ளிடத்தில் நாளை சாலை மறியல் போராட்டம்
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கொள்ளிடத்தில் நாளை(புதன்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.தெற்கு ராஜன்வாய்க்கால் பாசன சங்க தலைவர் இளங்கோவன், செயலாளர் ஆனந்தகுமார், துணைத் தலைவர் ராஜதுரை, பொருளாளர் ராமு, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் வரவேற்றார்.
இதில் விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
2020-21-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தில் அறுவடை பரிசோதனை எடுப்பதை நில உரிமையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்பே கொள்ளிடத்தில் இருந்து புத்தூரில் வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டுள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை மீண்டும் கொள்ளிடத்தில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து நாளை(புதன்கிழமை) காலை கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






