என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையில் கண்டெடுக்கப்பட்ட நட்சத்திர ஆமை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்14 Dec 2021 9:08 AM GMT (Updated: 14 Dec 2021 9:08 AM GMT)
திருப்பூர் வனத்துறை ஊழியர் சிவமணி நேரடியாக சிவானந்தம் வீட்டிற்கு வந்து ஆமையை சோதனை செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் பூலுவப்பட்டி பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பூலுவபட்டி அருகே சாலையில் நட்சத்திர ஆமை குட்டி ஒன்று நகர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டார். வாகனங்கள் அதிகம் பயணிக்கும் பகுதி என்பதால் உடனடியாக ஆமையை பாதுகாப்பாக எடுத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றார்.
அங்கு ஆமைக்கு தேவையான உணவை அவரது குடும்பத்தினர் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். நட்சத்திர ஆமை அரிய வகை என்பதால் சிவானந்தம் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திருப்பூர் வனத்துறை ஊழியர் சிவமணி நேரடியாக சிவானந்தம் வீட்டிற்கு வந்து ஆமையை சோதனை செய்தார்.
பின்னர் அவரிடம் நட்சத்திர ஆமையை சிவானந்தம் குடும்பத்தினர் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். திருப்பூரில் அரிய வகையான நட்சத்திர ஆமை எப்படி வந்தது என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X