search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விபத்தில் காயமடைந்தவரிடம் திருடிய வாலிபர் கைது

    போலீசார் சர்க்கரை முகமது மீது சந்தேகமடைந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பல்லடம் -அவினாசி சாலையில் பெரியபள்ளிவாசல் அருகே செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். உடனே அவரை அப்பகுதிபொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு உதவியாக சர்க்கரை முகமது (வயது 28) என்பவர் சென்றார்.

    இந்தநிலையில் சிகிச்சை மூலம் மயக்கம் தெளிந்த சிவகுமார் தனது சட்டை பாக்கெட்டுகளை பார்த்த போது அதில் இருந்த  பணம் , ஏ.டி.எம். கார்டு, கையில் அணிந்திருந்த வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை காணவில்லை.  

    இதுகுறித்து அவர் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சர்க்கரை முகமது மீது சந்தேகமடைந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். 

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  
    Next Story
    ×