search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    மேற்கு மாம்பலத்தில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு

    மேற்கு மாம்பலத்தில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி(26). இவர் நேற்று இரவு செல்போனில் பேசியபடியே அதே பகுதி ஆர்யகவுடா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென நந்தினியின் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×