search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    திருமூர்த்தி அணை-தளிவாய்க்காலில் புதிய குழாய் இணைப்பு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர்த் திட்ட திருப்பூர் கோட்ட நிர்வாக பொறியாளர் ரங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்காலை நீர் ஆதாரமாக கொண்டு உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு ரூ.85 கோடியில் நடைபெற்று வரும் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணை - தளிவாய்க்காலில் புதிய குழாய் இணைப்பு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

    எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள பூலங்கினர், கணக்கம்பாளையம், மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. 

    எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மூன்று நாட்களுக்கும் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×