என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்8 Dec 2021 10:58 PM GMT (Updated: 8 Dec 2021 10:58 PM GMT)
ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பிரபாவதி. இருவரும் நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் இந்த வீட்டை பூட்டி விட்டு ஜெயக்குமாரின் மற்றொரு வீட்டுக்கு சென்று இரவு படுத்துத் தூங்கினார்.
நேற்று அதிகாலை அவரின் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டுக்கு வந்து ஜெயக்குமார் பார்த்தபோது, மர்ம நபர் யாரோ பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X