என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கல்லாவி போலீசார் நாகமரத்துப்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அதே ஊரை சேர்ந்த சின்னப்பன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல சிங்காரப்பேட்டை போலீசார் சிங்காரப்பேட்டையில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் பாவக்கல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி ராசுவீதியை சேர்ந்த சாதிக் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 700 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.4 ஆயிரம் ஆகும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×