என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெம்பாக்கம் அருகே 9 பைக்குகள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்8 Dec 2021 11:01 AM GMT (Updated: 8 Dec 2021 11:01 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே 9 பைக்குகளை திருடியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் தூசி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் மாங்கால் கூட்டுரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பைக்கில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கில் வந்த நபர் மாமண்டூர், சந்தைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 34), என்பதும் இவர் காஞ்சிபுரம், மாமண்டூர், அப்துல்லாபுரம், தூசி, வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
திருடப்பட்ட பைக்குகளில் சென்று தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பாண்டியனை கைது செய்த போலீசார் அவர் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது கொள்ளை, வழிப்பறி என பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் தூசி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் மாங்கால் கூட்டுரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பைக்கில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கில் வந்த நபர் மாமண்டூர், சந்தைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 34), என்பதும் இவர் காஞ்சிபுரம், மாமண்டூர், அப்துல்லாபுரம், தூசி, வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
திருடப்பட்ட பைக்குகளில் சென்று தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பாண்டியனை கைது செய்த போலீசார் அவர் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது கொள்ளை, வழிப்பறி என பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X