search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    மோசடியில் ஈடுபட்ட வங்கியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    வங்கி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், டெபாசிட் பணத்தை பொது மக்களுக்கு திருப்பிக் கொடுக்கவும் கோரி ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ராஜபாளையம்:

    விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த தனியார் வங்கி மூடப்பட்டு டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித்தரப்பட வில்லை. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளன.

    வங்கி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், டெபாசிட் பணத்தை பொது மக்களுக்கு திருப்பிக் கொடுக்கவும் கோரி ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜமீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். அகில பாரத இந்து மகாசபா மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், கங்காதரன், அகில இந்திய தேவர் கூட்டமைப்பு தலைவர் ஜெயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சதுரகிரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    தனியார் வங்கி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தனியார் வங்கியில் டெபாசிட் செய்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×