என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொடர் மழையால் பாலாற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்
Byமாலை மலர்7 Dec 2021 10:11 AM GMT (Updated: 7 Dec 2021 10:11 AM GMT)
தொடர் மழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் சிறுவர்கள் உற்சாகமாக குளித்தனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் இருந்து உருவாகி வரும் பாலாறு, பள்ளபட்டி, மேலப்பட்டி, கிருங்காகேட்டை வழியாக சிங்கம்புணரி வந்து அடைகிறது.
சிங்கம்புணரியில் இருந்து மட்டிக்கண்மாய் வழியாக ஆ.காளாப்பூர், சிலநீர்பட்டி வழியாக திருப்பத்தூர் பெரிய கண்மாயை சென்றடையும் வகையில் ஆறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, வையாபுரிபட்டி, சிங்கம்புணரி, சிவபுரிபட்டி மட்டிகண்மாய், ஆ.காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் போன்ற பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பின.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த தண்ணீர் சிங்கம்புணரி வழியாக திருப்பத்தூர் நோக்கி சென்றது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் தண்ணீரில் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்டனர்.
சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் இருந்து உருவாகி வரும் பாலாறு, பள்ளபட்டி, மேலப்பட்டி, கிருங்காகேட்டை வழியாக சிங்கம்புணரி வந்து அடைகிறது.
சிங்கம்புணரியில் இருந்து மட்டிக்கண்மாய் வழியாக ஆ.காளாப்பூர், சிலநீர்பட்டி வழியாக திருப்பத்தூர் பெரிய கண்மாயை சென்றடையும் வகையில் ஆறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, வையாபுரிபட்டி, சிங்கம்புணரி, சிவபுரிபட்டி மட்டிகண்மாய், ஆ.காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் போன்ற பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பின.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த தண்ணீர் சிங்கம்புணரி வழியாக திருப்பத்தூர் நோக்கி சென்றது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் தண்ணீரில் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X