என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
Byமாலை மலர்6 Dec 2021 9:08 AM GMT (Updated: 6 Dec 2021 9:08 AM GMT)
கிருஷ்ணகிரி பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா பெத்தனப்பள்ளி அருகே உள்ள வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 30). இவர் கிட்டம்பட்டி இந்தியன் வங்கி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். அதே போல கிருஷ்ணகிரி பழையபேட்டை மதர்சாய்பு தெருவை சேர்ந்தவர் அப்துல் சத்தார் (28) தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி போலீசில் புகார் செய்தனர். இதேபோல ராமாபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் இளவரசன் (35). இவர் பந்தாரப்பள்ளி அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து இளவரசன் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த சண்முக சுந்தரம் (50) என்பவர் இந்த 3 மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X