என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜாவத் புயல் - திருப்பூர் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து
Byமாலை மலர்3 Dec 2021 9:25 AM GMT (Updated: 3 Dec 2021 9:25 AM GMT)
அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய அரோனி எக்ஸ்பிரஸ் இயக்கம் நேற்று நிறுத்தப்பட்டது.
திருப்பூர்:
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‘ஜாவத்’ புயலாக மாறி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை (4-ந் தேதி) நெருங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தென் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல்பகுதியில் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தெற்கு ரெயில்வே ரெயில் இயக்கத்தை ரத்து செய்தும், வழித்தடம் மாற்றியும் இன்றும், நாளையும் இயக்குகிறது.
அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு இயக்கப்படும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய அரோனி எக்ஸ்பிரஸ் இயக்கம் நேற்று நிறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X