search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.
    X
    ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: மதியம் 2 மணிக்கு விசாரணை

    அ.தி.மு.க. தலைமைக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை நேற்று அறிவித்தது. இந்த தேர்தலலை எதிர்த்து கே.சி. பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மதியம் 2 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

    சென்னை உயர்நீதிமன்றம்

    முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×