என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் பைக் மோதி லேத் தொழிலாளி பலி
Byமாலை மலர்1 Dec 2021 7:40 AM GMT (Updated: 1 Dec 2021 7:40 AM GMT)
வெள்ளகோவிலில் இருந்து தாசநாயக்கன்பட்டிக்கு பைக்கில் உத்தமபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பைக் சுபாஷ் மீது மோதியது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுபாஷ்(வயது24). இவர் வெள்ளகோவிலில் இருந்து தாசநாயக்கன்பட்டிக்கு பைக்கில் உத்தமபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பைக் சுபாஷ் மீது மோதியது.இதில் சுபாஷ்க்கு வயிறு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுபாஷை அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சுபாஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இறந்துபோன சுபாஷ் லேத் வேலை செய்து வருபவர் ஆவார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X