search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் பைக் மோதி லேத் தொழிலாளி பலி

    வெள்ளகோவிலில் இருந்து தாசநாயக்கன்பட்டிக்கு பைக்கில் உத்தமபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பைக் சுபாஷ் மீது மோதியது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுபாஷ்(வயது24). இவர் வெள்ளகோவிலில் இருந்து தாசநாயக்கன்பட்டிக்கு பைக்கில் உத்தமபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பைக் சுபாஷ் மீது மோதியது.இதில் சுபாஷ்க்கு வயிறு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுபாஷை அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சுபாஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இறந்துபோன சுபாஷ் லேத் வேலை செய்து வருபவர் ஆவார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×