search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, பெரிய வலசு, சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி மணிமேகலை. தறிப்பட்டறை தொழிலாளி. இவர்களது மகன் திருநிறைச்செல்வன் (வயது 16). நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநிறைச்செல்வன் திடீரென பெட்ரோலை குடித்தார். இதையடுத்து திருநிறைச்செல்வன் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் குணமடைந்தார்.

    இதையடுத்து சிறிது நாளில் திருநிறைச்செல்வன் மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவத்தன்று திருநிறைச்செல்வன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது மகன் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியே உள்ள கழிவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார்கள். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த திருநிறைச்செல்வனின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு திருநிறைச்செல்வன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திருநிறைச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×