search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ராஜா தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தற்போது திருப்பூரில் வேலை இல்லாத காரணத்தால் திவாகர் சொந்த ஊருக்கு திரும்பினார். வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட திவாகரின் சகோதரி பிரபாவதி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×