என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள நன்னியூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 37). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை கரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பிறகு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×