search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.பி.உதயகுமார்
    X
    ஆர்.பி.உதயகுமார்

    ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

    மதுரை மாவட்டத்தில் ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அரிசி துர்நாற்றம் வீசுவதாகவும், சாப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை எனவும் கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    மாவட்டத்தில் பல இடங்களில் ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் அரிசியை கொட்டி மறியலில் ஈடுபட்டு வருவது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருவதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிற அரிசியின் தரம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு மக்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக தராமான அரிசியை பொது விநியோகத்திட்டதின் கீழ் விநியோகம் செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×